கோவையில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் - மெசேஜ் அனுப்பி பணம் மோசடி.!

வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்று தகவல் அனுப்பி ஆன்லைன் மூலம் கோவையைச் சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்று தகவல் அனுப்பி ஆன்லைன் மூலம் கோவையைச் சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை நகரில் ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவது அதிகரித்து உள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண்ணை பெற்று மோசடி, போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் வசூலிப்பது என்று மோசடிகள் அரங்கேறுகின்றன.

கொரோனா பரவலுக்குப் பின்னர் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்து வருகிறது. அதை பயன்படுத்தியும் மோசடி நடைபெறுகிறது.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

பகுதி நேர வேலையாக வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்ற தகவலுடன் வாட்ஸ்அப் மூலம் ஒரு லிங்க் முகவரி அனுப்பப்படுகிறது. அதில், பிரபல தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் வீட்டிலிருந்தபடியே தினமும் ரூ.900 வருமானம் ஈட்டலாம் என்று அறிவிக்கிறார்கள்.

அதை நம்பி, அந்த லிங்கை ஓபன் செய்து பதிவு செய்து, முதலில் ரூ.200 செலுத்தினால் ரூ.350 கொடுக்கிறார்கள். அதைத்தொடர்ந்து ரூ.1000 செலுத்தினால் ரூ.2 ஆயிரம் தருவார்கள். அந்த ஆசையில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்த கோவையைச் சேர்ந்த பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

இது போன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பலர் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர். பெண்களிடம், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதில் முதலீடு செய்யலாம் என்றும், ரெடிமேடு ஆடைகள், செல்போன் விற்பனை செய்யலாம் என்று ஆண்களுக்கும் லிங்க் அனுப்பி மோசடி செய்யப்படுகிறது.

எனவே ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு சைபர்கிரைம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...