வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆறு மற்றும் மழையினால் சாலை அருகில் புதிதாக தோன்றும் நீர் வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் மிக தீவிரம் அடைந்து நிலையில், பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் 11 மாவட்டங்களுக்கு பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை தமிழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடி வருகின்றனர். மேலும், மழையினால் சாலை அருகில் புதிதாக தோன்றும் நீர் வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றனர்.
வனப்பகுதியில் கன மழை பெய்தால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது என்பதால் கூழாங்கல் ஆற்றில் விளையாடிய சுற்றுலா பயணிகளுக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.
வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் மிக தீவிரம் அடைந்து நிலையில், பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் 11 மாவட்டங்களுக்கு பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை தமிழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடி வருகின்றனர். மேலும், மழையினால் சாலை அருகில் புதிதாக தோன்றும் நீர் வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றனர்.
வனப்பகுதியில் கன மழை பெய்தால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது என்பதால் கூழாங்கல் ஆற்றில் விளையாடிய சுற்றுலா பயணிகளுக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.