வால்பாறை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் சாலையில் சுற்றிய கடமான் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் சிறுத்தைகள், காட்டு எருமைகள், கடமான், சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளில் யானைகள் காட்டெருமைகள் காணப்படும். அவைகளைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இன்று மதியம் வால்பாறை அருகே ஸ்டேன்மோர் பகுதியில், கடமான் ஒன்று சாலையில் சுற்றித் திரிந்தது.

அதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சிறிது நேரம் சாலையில் நடந்து சென்ற கடமான் தேயிலைத் தோட்டம் வழியாக வன பகுதிக்குள் சென்றது. வன விலங்குகளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் சிறுத்தைகள், காட்டு எருமைகள், கடமான், சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளில் யானைகள் காட்டெருமைகள் காணப்படும். அவைகளைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இன்று மதியம் வால்பாறை அருகே ஸ்டேன்மோர் பகுதியில், கடமான் ஒன்று சாலையில் சுற்றித் திரிந்தது.
அதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சிறிது நேரம் சாலையில் நடந்து சென்ற கடமான் தேயிலைத் தோட்டம் வழியாக வன பகுதிக்குள் சென்றது. வன விலங்குகளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.