கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குழிக்குள் விழுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை..!

குழிக்குள் விழுந்த ஆண் யானை வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்தில், சோர்ந்து படுத்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குழிக்குள் விழுந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு, நாய்க்கன்பாளையம் தெற்கு சுற்று அருகிலுள்ள CRPF முகாமிற்குள், சேற்றில் குழிக்குள் வழுக்கி விழுந்த ஆண் யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர்.

மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த யானை உற்சாகமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், அந்த யானையின் உடல் நிலையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் அந்த ஆண் யானை வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்திற்கு வந்து, சோர்ந்து சாய்ந்து படுத்துவிட்டது.

இதையடுத்து, உடனடியாக யானைக்கு சிகிச்சை அளிக்க முதுமலை வனக் கால்நடை மருத்துவர் Dr.ராஷேஸ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் Dr.வெற்றிவேல் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...