கோவையில் ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 8 பேர் கைது..!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை அடுத்த துடியலூர் சுப்பிரமணி பாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெகதீஷ் (50), அவருடைய மனைவி கோகிலா தேவி (42) ஆகியோர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல், அந்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...