பொள்ளாச்சி வால்பாறை சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி வால்பாறை சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.
கோவை மாவட்டம் ஆழியாறு அணை அருகே அமைந்துள்ளது குரங்கு நீர்வீழ்ச்சி இங்கு உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
பொள்ளாச்சி வால்பாறை சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி நேற்றும் இன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பொள்ளாச்சி வனத்துறை அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.