வால்பாறையில் மக்கள் சபை நிகழ்ச்சியில் நீண்ட கால கோரிக்கையான கல்லார் பழங்குடி மக்கள் 21-பேருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பட்டா வழங்கினார்.
கோவை: வால்பாறையில் மக்கள் சபை நிகழ்ச்சியில் நீண்ட கால கோரிக்கையான கல்லாறு பழங்குடி மக்கள் 21-பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை மூலம் மக்களைச் சந்தித்து குறைகளைத் தீர்த்து வருகிறார்கள், இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வால்பாறை பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
இதில்நீண்ட நாள் கோரிக்கையான கல்லாறு பழங்குடி மக்களுக்கு அரசிடம் கேட்ட தெப்பக்குளம் மேடு பகுதியில் முதலமைச்சர் ஆணைப்படி 21 குடும்பங்களுக்கு இரண்டு சென்ட் பட்டா வழங்கினர். மேலும் வால்பாறையில் உள்ள முதியோர் வயது ஓய்வு ஊதியம் 10 பேர்களுக்கு, உரிமை சான்றிதழ் 1, வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பொள்ளாச்சி ஆட்சியர் மண்டல நகராட்சி நிர்வாகம் இயக்குனர்ரவிச்சந்திரன், வால்பாறை நகராட்சி ஆணையாளர், சுரேஷ் த.பால்பாண்டி வழக்கறிஞர் நகர கழக பொறுப்பாளர், கோழி கடை கணேசன் முன்னாள் நகர செயலாளர் JPR பாஸ்கர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், செல்வம் நகர பொருளாளர் த ம செந்தில் குமார் நகர துணை செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், ASN வெங்கடேஷ் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்ட பிரபு, நகர மாணவர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஈகா பொண்ணுசாமி, மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் டென்சிங், சிறுபான்மை பிரிவு, மணிகண்டன் மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் சதீஷ் குமார் நகர தொண்டரணி அமைப்பாளர் பிரதீஸ் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.