கோவை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் எரியாத தெருவிளக்குகள் தொடர்பாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறுவதற்கு 24 மணி நேர சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் ஜேசிபி வாகனம் மற்றும் டிரைவருடன் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் எரியாத தெருவிளக்குகள் தொடர்பாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறுவதற்கு 24 மணி நேர சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது.
இதில் பெறப்படும் புகார்களை உடனடியாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து, பெறப்பட்ட தகவலை அதன் முக்கியத்துவம் கருதி மாநகராட்சி கமிஷனர், பொறியாளர், செயற்பொறியாளர், நகர் நல அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்களுக்கு தொலைப்பேசி மூலம் உடனுக்குடன் விவரத்தைத் தெரிவிக்க இளநிலை உதவியாளர்கள் அந்தஸ்தில் உள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஒவ்வொரு மண்டலத்திலும் ஜேசிபி வாகனம் மற்றும் டிரைவருடன் தயார் நிலையில் வைத்திருக்கவும், மின்சாரம் தொடர்பான ஆபரேட்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதில் பெறப்படும் புகார்களை உடனடியாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து, பெறப்பட்ட தகவலை அதன் முக்கியத்துவம் கருதி மாநகராட்சி கமிஷனர், பொறியாளர், செயற்பொறியாளர், நகர் நல அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்களுக்கு தொலைப்பேசி மூலம் உடனுக்குடன் விவரத்தைத் தெரிவிக்க இளநிலை உதவியாளர்கள் அந்தஸ்தில் உள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஒவ்வொரு மண்டலத்திலும் ஜேசிபி வாகனம் மற்றும் டிரைவருடன் தயார் நிலையில் வைத்திருக்கவும், மின்சாரம் தொடர்பான ஆபரேட்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.