பொள்ளாச்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவரை நேரில் சந்தித்த அமைச்சர்!

பொள்ளாச்சியில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பாராட்டு!


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு முடிவுகள் வந்த நிலையில் 406 மதிப்புகள் எடுத்து மருத்துவ படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் ஆத்து பொள்ளாச்சி கிராமத்திற்கு நேரில் சென்று, நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு மருத்துவ படிப்பிற்குத் தேவையான உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். அமைச்சரின் திடீர் வருகையால் மாணவர் மற்றும் அவரின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...