இன்று காலை பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (02644), கோவைக்கு வந்த போது, சோதனையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் கஞ்சா கடத்தியதற்காக கைது.
கோவை: கோவையில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த பீகார் இளைஞரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து விரைவு ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் கார்த்திகேயன் உதவி ஆய்வாளர், குற்ற புலனாய்வு துறை, இரயில்வே பாதுகாப்பு படையினர் தலைமையில், ரெயில்வே போலீஸ் படையினர் இன்று பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் (02644), காலை 10.30 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முன்பதிவு பெட்டியில் (S-4) இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பீகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பிஷேஷ் குமார் யாதவ் (26) என்பதும், இவர் ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து சுமார் 1.5 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனா்.
வெளி மாநிலங்களில் இருந்து விரைவு ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் கார்த்திகேயன் உதவி ஆய்வாளர், குற்ற புலனாய்வு துறை, இரயில்வே பாதுகாப்பு படையினர் தலைமையில், ரெயில்வே போலீஸ் படையினர் இன்று பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் (02644), காலை 10.30 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முன்பதிவு பெட்டியில் (S-4) இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பீகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பிஷேஷ் குமார் யாதவ் (26) என்பதும், இவர் ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து சுமார் 1.5 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனா்.