மேலும், சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்கள், ரூ.1,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் காரச்சேரி சாலை பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை பின்புறம் சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட கோவை செட்டிபாளையம் பெரியகுயிலி, பஞ்சாயத்து ஆபீஸ் வீதியைச் சேர்ந்த சிவக்குமார் (41), காரசேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்கள், 1,500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் காரச்சேரி சாலை பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை பின்புறம் சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட கோவை செட்டிபாளையம் பெரியகுயிலி, பஞ்சாயத்து ஆபீஸ் வீதியைச் சேர்ந்த சிவக்குமார் (41), காரசேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்கள், 1,500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.