கடந்த மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி வீடுகளின் முன்பக்க நுழைவு வாயில் மீது ஏறி மக்களை அச்சுறுத்த துவங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி: கோத்தகிரி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், மீண்டும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் சில நாட்களாக கரடி ஒன்று உலா வருகிறது.
இந்த கரடி இரவு நேரங்களில் கடைவீதி, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உலா வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி வீடுகளின் முன்பக்க நுழைவு வாயில் மீது ஏறி மக்களை அச்சுறுத்த துவங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வாசலில் கரடி உலா வந்த சிசிடிவி கேமரா பதிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் மக்கள் நடமாடும் பகுதியில் உலாவரும் கரடியைப் பிடிப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைக்க கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் சில நாட்களாக கரடி ஒன்று உலா வருகிறது.
இந்த கரடி இரவு நேரங்களில் கடைவீதி, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உலா வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி வீடுகளின் முன்பக்க நுழைவு வாயில் மீது ஏறி மக்களை அச்சுறுத்த துவங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வாசலில் கரடி உலா வந்த சிசிடிவி கேமரா பதிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் மக்கள் நடமாடும் பகுதியில் உலாவரும் கரடியைப் பிடிப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைக்க கோரிக்கை விடுத்தனர்.