கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை எம்.எல்.ஏ., செ.தாமோதரன் திடீர் ஆய்வு..!

மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்க அனுமதித்தும் இதுவரை போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில், மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்க அனுமதித்தும் இதுவரை போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.

மேலும், ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு கிணத்துக்கடவு ரயில் நிலையம் மூடும் நிலைக்கு வந்துள்ளது.



இந்நிலையில், இன்று கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு திடீரென வந்த கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், ரயில் நிலையத்தில் இருந்த பணியாளர்களிடம் ரயில் நிலையம் குறித்து கேட்டறியப்பட்டது.

பல கோடி ரூபாய் செலவு செய்து மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைந்து போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே ரயில்களை இயக்க பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளரிடம் சந்திக்க உள்ளதாகவும், மேலும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்துடன் இருப்பதால் பல்வேறு பணிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் சந்தித்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் மற்றும் மதுரை கோட்டத்தில் இணைக்க கோரிக்கை வைக்கப்படும் என்று எம்.எல்.ஏ., செ.தாமோதரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...