கோவையில் அரசுப் பணிக்கு போலி ஆணை வழங்கி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் போலியான நியமன ஆணை வழங்கி 50 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் அரசுப் பணிக்கு போலி ஆணை வழங்கி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லோகேஷ் அரவிந்த் (28). இவருக்கு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மோகன் (40), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மோகனுடைய உறவினர் ஒருவர், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக லோகேஷ் அரவிந்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண்துறையில் அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும் பணம் கொடுத்தால், உறவினரிடம் தெரிவித்து வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய லோகேஷ் அரவிந்த் 18 பேரிடமிருந்து, 50 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோகனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற மோகன், பணிக்கான போலி ஆணைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். இந்த ஆணையுடன் பணிக்கு சென்றபோது, ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
இது குறித்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோகனை கைது செய்து விசாரித்தனர்.
அவரிடம் இருந்த, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. இதில், தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் அரசுப் பணிக்கு போலி ஆணை வழங்கி, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லோகேஷ் அரவிந்த் (28). இவருக்கு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மோகன் (40), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மோகனுடைய உறவினர் ஒருவர், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக லோகேஷ் அரவிந்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண்துறையில் அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும் பணம் கொடுத்தால், உறவினரிடம் தெரிவித்து வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய லோகேஷ் அரவிந்த் 18 பேரிடமிருந்து, 50 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோகனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற மோகன், பணிக்கான போலி ஆணைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். இந்த ஆணையுடன் பணிக்கு சென்றபோது, ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
இது குறித்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோகனை கைது செய்து விசாரித்தனர்.
அவரிடம் இருந்த, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டது. இதில், தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.