கோவை பேரூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர்..!

பேரூர் மத்திபாளையம் பகுதியில் கனமழையால், வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை அருகே பேரூர் பகுதியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர்.

கோவை தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, பள்ள ஓடை, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்நிலையில், கன மழையின்போது, மத்திபாளையம், தெற்கு வீதியைச் சேர்ந்த பெரிய பாப்பாத்தி என்பவரின் வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. வீட்டுக்குள் பாப்பாத்தி, அவரது தங்கை மற்று தம்பி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதேபோல, மத்திபாளையம், வடக்கு வீதி கார்த்தி என்பவரது வீட்டின் சுவரும், மழையின் போது இடிந்து விழுந்தது. பழைய வீடு என்பதால், யாரும் வசிக்கவில்லை.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...