நாளை காலை 10 மணி அளவில் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மனுக்களை அளித்து குறைகளை தீர்த்து கொள்ள வேண்டும்.
கோவை: வால்பாறை பகுதியில் நாளை மக்கள் சபை நிகழ்ச்சி அமைச்சர் மனுக்கள் பெறுகிறார்.
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, மக்கள் சபை நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதே போல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நாளை மக்கள் சபை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல நகராட்சி ஆணையாளர், வால்பாறை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்கள்.
வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மனுக்களை அளித்து குறைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, மக்கள் சபை நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதே போல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நாளை மக்கள் சபை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல நகராட்சி ஆணையாளர், வால்பாறை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்கள்.
வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மனுக்களை அளித்து குறைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.