காலை 6-மணி முதல் 7-மணி வரையிலும், மாலை 7-மணி முதல் 8-மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 39-பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவ 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை மீறி அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறி கோவை புறநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக பெரிய நாயக்கன் பாளையம் சப்&டிவிசனில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரூர் சப்&டிவிசனில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கருமத்தம் பட்டி சப்&டிவிசனில் 5 வழக்குகளும், பொள்ளாச்சி சப்டிவிசனில் 4 வழக்குகளும், வால்பாறை சப்& டிவிசனில் 5 வழக்குகளும், மேட்டுப்பாளையம் சப்&டிவிசனில் 3 வழக்குகளும் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகரில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தமாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவ 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை மீறி அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை மீறி கோவை புறநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக பெரிய நாயக்கன் பாளையம் சப்&டிவிசனில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரூர் சப்&டிவிசனில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கருமத்தம் பட்டி சப்&டிவிசனில் 5 வழக்குகளும், பொள்ளாச்சி சப்டிவிசனில் 4 வழக்குகளும், வால்பாறை சப்& டிவிசனில் 5 வழக்குகளும், மேட்டுப்பாளையம் சப்&டிவிசனில் 3 வழக்குகளும் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகரில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தமாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.