கோவையில் அருகே கொள்ளையர் பற்றி தகவல் சொன்ன பெண்ணுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!

கோவையில் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.


கோவை: கோவையில் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த பெண்ணுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

கருமத்தம்பட்டி அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா வயது 40, என்பவரின் வீட்டில் கடந்த 1ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து கொண்டிருப்பது பற்றி தெரிந்து கொண்ட அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த முன்னாள் ஆயுதப்படை போலீஸ்காரர் ஆன முரளி ஈஸ்வரன் என்பவரைப் பொதுமக்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்தனர்.

மற்றொரு நபர் தப்பிச் சென்றார். இதனையடுத்து திருட்டு சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவிக்க டிஐஜி முத்துசாமி சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் வந்தார்.



அவர் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த கோமதி மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...