கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் கஞ்சா கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு!

தனியார் நிறுவன ஊழியரிடம் கஞ்சா கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யட்டநிலையில், ஒருவர் தப்பி ஓட்டம்.


கோவை: தனியார் நிறுவன ஊழியரிடம் கஞ்சா கேட்டு டாஸ்மாக் கடையில் தகராறு செய்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யட்டநிலையில், ஒருவர் தப்பி ஓட்டம்.

கோவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 27, தனியார் நிறுவன ஊழியர் நேற்று இவர் காமராஜர் நகர் முனியப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காகச் சென்றார்.

மது குடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மார்த்தாண்டம் 21, கண்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் பிரேம்குமார் இடம் கஞ்சா கொடுக்கும்படி கேட்டனர். அப்போது அவர் தன்னிடம் கஞ்சா இல்லை எனக் கூறி உள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மார்த்தாண்டம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேம்குமாரின் தலை, மற்றும் கழுத்தில் குத்தினார். கண்ணன் அங்கிருந்து பீர் பாட்டிலை உடைத்து அவரது தலையில் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பிரேம்குமார் போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கிய காமராஜர் நகரைச் சேர்ந்த மார்த்தாண்டத்தைக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கண்ணனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...