வால்பாறையில் உண்டு உறைவிட பள்ளியை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறப்பு!

வால்பாறை பகுதியில், உள்ள உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, நேசம் டிரஸ்ட், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசியா வித்யாலயா இணைந்து இன்று தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், உள்ள உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேசம் டிரஸ்ட் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசியா வித்யாலயா இணைந்து இன்று தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கல்வி உயர் அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். வால்பாறை தொடக்கப்பள்ளி அலுவலர் காளிமுத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவன்ராஜ் ராபின்சன் ஏஸ்.ஏஸ்.ஏ. ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில், தமிழகத்திலேயே வால்பாறை பகுதியில் தான் உண்டு உறைவிடப்பள்ளி 12-ஆம் வகுப்புவரை துவங்கப்பட்டு தற்போது மத்திய அரசின் இது போன்ற பள்ளிகள் இந்தியாவில் ஆயிரத்து 5700 பள்ளிகள் இயங்குகின்றன.

எனவே வால்பாறை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களைக் கண்டறிந்து இங்கு சிறந்த கல்வியை வழங்குகின்ற, ஆசிரியர் ஆசிரியை மற்றும் நேசக்கரங்கள் நிர்வாக இயக்குனர் செந்தில் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வால்பாறை வட்டாட்சியர் குமார் வருவாய் துறை அலுவலர்கள், நேசக்கரங்கள் செந்தில் தலைமையாசிரியர் சிவராஜ் ராபின்சன் எஸ்.எஸ்.ஏ ஆசிரியர்கள் மற்றும் கழக திமுக பொறுப்பாளர்கள், திமுக நகர செயலாளர் பால் பாண்டி, முன்னாள் நகர செயலாளர் கணேசன் ஜேபி பாஸ்கரன், மகுடீஸ்வரன், செந்தூர்பாண்டி, செந்தில் ஆதிதிராவிடர் ஒருங்கிணைப்பாளர் இரா.சேகரன், ஆசைத்தம்பி, செல்வம், சுதாகரன், வீரமணி, ஈகா.பொன்னுச்சாமி, அண்ணாநகர் தேவராஜ், அம்பிகை, சுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...