வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரடியை பார்த்து பயந்து அலறியடித்து ஓடிய பெண் கால் இடறி கீழே விழுந்ததில், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது.
வால்பாறை: வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரடியை பார்த்து பயந்து அலறியடித்து ஓடிய பெண் கால் இடறி கீழே விழுந்ததில், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது.
வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11-மணியளவில் அங்குள்ள 17-ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இரை தேடி வந்த கரடி ஒன்று திடீரென தேயிலைத் தோட்டப் பகுதியில் நடமாடியது. அதைப் பார்த்த அருகில் நின்ற அருள்மேரி (வயது 48) என்ற தொழிலாளி கரடி நம்மை தாக்கி விடுமோ? என பயந்து அலறியடித்து ஓடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறி கீழே விழுந்ததால், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் காயமடைந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி கரடி நடமாடிய பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11-மணியளவில் அங்குள்ள 17-ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இரை தேடி வந்த கரடி ஒன்று திடீரென தேயிலைத் தோட்டப் பகுதியில் நடமாடியது. அதைப் பார்த்த அருகில் நின்ற அருள்மேரி (வயது 48) என்ற தொழிலாளி கரடி நம்மை தாக்கி விடுமோ? என பயந்து அலறியடித்து ஓடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறி கீழே விழுந்ததால், கை மற்றும் காலில் சிறு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் காயமடைந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி கரடி நடமாடிய பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.