தீபாவளி பண்டியையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும் என்பதால், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள திட்டம்.
கோவை: தீபாவளி பண்டியையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும் என்பதால், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள திட்டம்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 120 பேர் முதல் 130 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பொருட்கள் வாங்கக் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.
இதனால் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா விதிமீறல்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை கடைத்தெருக்களில் தீபாவளி பண்டியையொட்டி கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இக்கூட்டத்தால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும்.
எனவே இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை விரைந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 120 பேர் முதல் 130 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பொருட்கள் வாங்கக் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.
இதனால் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா விதிமீறல்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை கடைத்தெருக்களில் தீபாவளி பண்டியையொட்டி கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இக்கூட்டத்தால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும்.
எனவே இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை விரைந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.