கோவையில் பண்டிகை கூட்டம்: தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு.!

தீபாவளி பண்டியையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும் என்பதால், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள திட்டம்.


கோவை: தீபாவளி பண்டியையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும் என்பதால், மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள திட்டம்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 120 பேர் முதல் 130 பேர் வரை மட்டுமே கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பொருட்கள் வாங்கக் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.

இதனால் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பரிசோதனைகள் மற்றும் கொரோனா விதிமீறல்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை கடைத்தெருக்களில் தீபாவளி பண்டியையொட்டி கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இக்கூட்டத்தால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரம் கடந்த பின்னர் தான் தெரியவரும்.

எனவே இந்த மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை விரைந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...