மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20-சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவை: மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20 சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி என்றாலே பொதுமக்கள் மிகவும் உற்சாகத்தோடு முதலில் வாங்குவது பட்டாசு தான். பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்கள் மகிழ்ச்சியாகக் கருதுவார்கள். நரகாசுரன் அளிக்கப்பட்டதைப் பட்டாசு வெடித்துத் தெரிவிப்பதே தீப ஒளி திருநாளில் முக்கிய அம்சமாகும்.
இருந்தாலும் இந்த ஆண்டு மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20 சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாகவும், நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவும், இந்தாண்டு தீபாவளிக்குப் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது.
தீபாவளி என்றாலே மக்கள் முதலில் 'பர்ச்சேஸ்' செய்வது பட்டாசு தான். ஒரு காலத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே தெருக்களில் பட்டாசு சத்தம் காதை கிழிக்கும். கடந்தாண்டு, கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, வழக்கத்தை விட குறைவாகவே பட்டாசுகள் விற்பனை ஆனது.
இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், புது புது ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. பசுமை பட்டாசுகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆனால் விற்பனை கடந்த ஆண்டை விட, மேலும் 20 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூ மார்க்கெட் பகுதியிலுள்ள, 'குட்வில் கிராக்கர்ஸ்' கடை உரிமையாளர் உமாசங்கர் கூறுகையில், " போன வருஷத்தை விட இந்த வருஷம், 20 சதவீதம் விற்பனை குறைவாகத்தான் இருந்துச்சு. முதல் அலையின்போது கூட மக்கள் கையில் பணம் இருந்தது.
இந்த ஆண்டு விற்பனை மிகவும் 'டல்'. ஐந்தாயிரத்திற்குப் பட்டாசு வாங்கும் இடத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். விற்பனை ரொம்பவும் சுமார்," என்றார்.
தீபாவளி என்றாலே பொதுமக்கள் மிகவும் உற்சாகத்தோடு முதலில் வாங்குவது பட்டாசு தான். பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்கள் மகிழ்ச்சியாகக் கருதுவார்கள். நரகாசுரன் அளிக்கப்பட்டதைப் பட்டாசு வெடித்துத் தெரிவிப்பதே தீப ஒளி திருநாளில் முக்கிய அம்சமாகும்.
இருந்தாலும் இந்த ஆண்டு மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20 சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாகவும், நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவும், இந்தாண்டு தீபாவளிக்குப் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது.
தீபாவளி என்றாலே மக்கள் முதலில் 'பர்ச்சேஸ்' செய்வது பட்டாசு தான். ஒரு காலத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே தெருக்களில் பட்டாசு சத்தம் காதை கிழிக்கும். கடந்தாண்டு, கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, வழக்கத்தை விட குறைவாகவே பட்டாசுகள் விற்பனை ஆனது.
இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், புது புது ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. பசுமை பட்டாசுகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆனால் விற்பனை கடந்த ஆண்டை விட, மேலும் 20 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூ மார்க்கெட் பகுதியிலுள்ள, 'குட்வில் கிராக்கர்ஸ்' கடை உரிமையாளர் உமாசங்கர் கூறுகையில், " போன வருஷத்தை விட இந்த வருஷம், 20 சதவீதம் விற்பனை குறைவாகத்தான் இருந்துச்சு. முதல் அலையின்போது கூட மக்கள் கையில் பணம் இருந்தது.
இந்த ஆண்டு விற்பனை மிகவும் 'டல்'. ஐந்தாயிரத்திற்குப் பட்டாசு வாங்கும் இடத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். விற்பனை ரொம்பவும் சுமார்," என்றார்.