அதிக மருத்துவ கல்லூரிகள் திறப்பதால் தமிழக மாணவர்கள் பயன்பெறுவார்கள்- ஜெயப்பிரகாஷ் காந்தி!

தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக மாணவர்கள் அதிகமாகப் பயன் பெறுவார்கள் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.


கோவை: தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக மாணவர்கள் அதிகமாகப் பயன் பெறுவார்கள் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

கூடுதல் மருத்துவக் கல்லூரிகளால், 'கட் ஆப்' மதிப்பெண் குறையும் என்பதால், தமிழக மாணவர்களுக்குப் பயன் கிடைக்க உள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் துவங்க உள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக, 11 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு, 700 - 720 மதிப்பெண்களை, 85 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால், இந்தாண்டு 197 பேர் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான, 'கட் ஆப்' குறைந்து வருகிறது.

இதற்குக் காரணம், கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படுவதே, கடந்தாண்டு தமிழகத்தில், 2,747 மருத்துவ இடங்கள் இருந்தன. நடப்பாண்டு புதிதாக மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டதால் மொத்தம், 4,100 மருத்துவ இடங்கள் இருக்கும்.

இதனால், தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும். மருத்துவ இடங்களுக்கான 'கட் ஆப்' மூன்று முதல் ஐந்து மதிப்பெண் குறையும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...