கோவை அருகே இந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவருடைய காருக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அருகே இந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவருடைய காருக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்தவர் சுபாஷ்(47). அகில பாரத ஹிந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, வீடு முன் தனது காரை நிறுத்தினார். இரவு 11:00 மணிக்கு கார் தீப்பற்றி எரிய துவங்கியது.
உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தார். சம்பவ இடத்தில், 2-லிட்டர் கொள்ளளவு பாட்டில் கிடந்தது. தடாகம் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர்.
அதில், இரண்டு நபர்கள் காரை நோக்கி வருவதும், கார் பலத்த ஓசையுடன் தீப்பற்றியதை அடுத்து, தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்தவர் சுபாஷ்(47). அகில பாரத ஹிந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, வீடு முன் தனது காரை நிறுத்தினார். இரவு 11:00 மணிக்கு கார் தீப்பற்றி எரிய துவங்கியது.
உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தார். சம்பவ இடத்தில், 2-லிட்டர் கொள்ளளவு பாட்டில் கிடந்தது. தடாகம் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர்.
அதில், இரண்டு நபர்கள் காரை நோக்கி வருவதும், கார் பலத்த ஓசையுடன் தீப்பற்றியதை அடுத்து, தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.