கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் துப்பாக்கி குண்டுகள் பட்டு ஜன்னல் கதவுகள் உடைந்ததால் பரபரப்பு; தீபாவளி பட்டசா என்று போலீசார் விசாரணை

விசாரணையில், அவர் வீட்டின் அருகே மின் கம்பத்தில் பலூன்களை கட்டிவைத்து ஒருவர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டு விளையாண்டதும், குறி தவறிய துப்பாக்கி குண்டுகள் ஜெகதீசசின் வீட்டின் ஜன்னல் கதவில் பட்டு உடைந்ததும் தெரியவந்துள்ளது.


கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஜெகதீசன் தீபாவளிக்காக தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று இரவு, வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இன்று காலை சம்பவ இடத்தில் சோதனை செய்ததில், சுவ்ற்றில் பல இடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் சோதனை செய்ததில் சிறிய வகை துப்பாக்கி தோட்டாக்கள் வீட்டின் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரனை செய்ததில், தீபாவளியை கொண்டாட சற்று தொலைவில் ஒரு பெண்மணி வீட்டின் முன்னுள்ள மின் கம்பத்தில் பலூன்களை கட்டிவைத்து ரைபிள் துப்பாக்கியால் சுட்டு விளையாண்டதும், குறி தவறிய துப்பாக்கி குண்டுகள் ஜெகதீசசின் வீட்டின் ஜன்னல் கதவில் பட்டு உடைந்ததும் தெரியவந்துள்ளது.

போலிசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...