டெம்போவை சோதனையிட்ட போது, 2,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்குக் கடத்தி சென்றது தெரிய வந்தது.
கோவை: கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். வேகமாக வந்த டெம்போவை மறித்த போது, டிரைவர் சதாம் உசேன் (32), தப்பி ஓடினார்.
இதையடுத்து, டெம்போவை சோதனையிட்ட போது, 2,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக சதாம் உசேன் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சதாம் உசேன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கோவை பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். வேகமாக வந்த டெம்போவை மறித்த போது, டிரைவர் சதாம் உசேன் (32), தப்பி ஓடினார்.
இதையடுத்து, டெம்போவை சோதனையிட்ட போது, 2,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக சதாம் உசேன் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சதாம் உசேன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.