பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டம்- சிஐடியு.!!

ஒன்றிய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10-ம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.


கோவை: ஒன்றிய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10 -ம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் கூறுகையில்,

ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை எதிர்த்து சிஐடியு அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் யாத்திரை, மாட்டு வண்டி பேரணி உள்ளிட்ட வடிவங்களில் தொடர்ந்து நடத்துவது.

தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து டிசம்பர் 10 -ம் தேதி பத்து நிமிடம் வாகனத்தை நிறுத்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இதில் அனைத்து அமைப்புகளையும் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம்.

டிசம்பர் 10-ம் தேதி காலை 12 -மணி முதல் 12.10 மணிவரை பத்து நிமிடங்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை வெற்றிகரமாக்கிட சிறுசிறு குழுக்களை அமைத்து அனைத்து பெட்ரோல் பங்குகள் மற்றும் டோல்கேட்டுகள், டிராபிக் சிக்னல்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதர அமைப்புகளுடன் பேசி இப்போராட்டத்தை வலுவான போராட்டமாக முன்னெடுக்க இருக்கிறோம் என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...