முன்னாள் தி.மு.க அமைச்சர் தன்னிடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக சரிதாநாயர் தகவல்


முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனிமாணிக்கம் தன்னிடமிருந்து 25 லட்சரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோவையில் சரிதாநாயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தரும் நிறுவனம் நடத்தி அதன் மூலமாக சரிதாநாயர் அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூபாய் 28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2009-ஆம் ஆண்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று சரிதா நாயர் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 10-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர், முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனி மாணிக்கம் தன்னிடம் 25 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் குறித்து தற்போது கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற உமன்சாண்டி உள்ளிட்ட சில கேரள அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் சரிதாநாயர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...