கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.
கோவை: கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்ற அவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 53, வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஜவுளித் வாங்குவதற்காக டவுன் ஹாலில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றார்.
ஜவுளிகளை வாங்கி முடித்த பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை அருகே சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 53, வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஜவுளித் வாங்குவதற்காக டவுன் ஹாலில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றார்.
ஜவுளிகளை வாங்கி முடித்த பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை அருகே சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.