அதிரடியாக உயர தொடங்கிய தங்கம் விலை.. ரூ.37-ஆயிரத்தைத் தாண்டியது.!!

ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 37-ஆயிரத்தை கடந்தது: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதே காரணம் என வல்லுனர்கள் கருத்து.



கோவை: ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 37-ஆயிரத்தை கடந்தது: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதே காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரலாறு காணாத அளவு அதிகரிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாயைக் கடந்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை சிறிது குறையத் துவங்கி ஒரு சவரன் 36-ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

விலை குறைப்பு குறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகை வாங்க முயற்சி மேற்கொள்வதற்கு முன்னதாக மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் துவங்கி விடுகிறது. தொடர் முகூர்த்த நாட்கள் காரணமாகச் செப்டம்பர் மாதம் தினமும் 60-கோடி ரூபாய்க்கு கோவையில் தங்க நகை வணிகம் நடைபெற்றது.

தற்போது அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக அதிகரித்து ஒரு சவரன் 37-ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. விலை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்து மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், "தங்கத்தின் விலை ஒரு சவரன் தற்போது 37-ஆயிரம் ரூபாயைக் கடந்து உள்ளதற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதே முக்கிய காரணமாகும்.

எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். கோவையைப் பொருத்தவரை தீபாவளி பண்டிகை முடிந்த பின்புதான் தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் அபரிமிதமான விலை உயர்வு எதிர்வரும் நாட்களில் தங்க நகை வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்றார்.

கோவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட ஒரு சவரன்(8 கிராம்) தங்கத்தின் விலை விவரப்பட்டியல்,

October 19: Rs 36,720

October 20: Rs 36,656

October 21: Rs 36,768

October 23: Rs 36,976

October 24: மார்க்கெட் விடுமுறை

October 25: Rs 37,104

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...