வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 700 முதல் 800 டன் வரை பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக காணப்பட்டது.
இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேங்கியுள்ள குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 700 முதல் 800 டன் வரை பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது. தேங்கி இருக்கும் குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. குப்பைகளின் அளவு பெருமளவு குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக காணப்பட்டது.
இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேங்கியுள்ள குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 700 முதல் 800 டன் வரை பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது. தேங்கி இருக்கும் குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. குப்பைகளின் அளவு பெருமளவு குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.