திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 35 ஆடுகள் பரிதாப பலி; 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த 'டிவி'க்கள் பழுதாகின.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலி.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 35 ஆடுகள் நேற்று இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியாகினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகணேச மூர்த்தி (57), விவசாயி. நேற்று மாலை, மேய்ச்சலுக்கு சென்று வந்த 80 செம்மறி ஆடுகளை, தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார்.

இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, தோட்டத்தில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.. விபத்தில்,மரத்தை ஒட்டியிருந்த பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில், 35 ஆடுகள் கருகி பலியாகின.

புகாரின் பேரில், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஓலப்பாளையம், கொளிஞ்சிகாட்டு வலசு பகுதியில் இடி, மின்னல் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகளில், 'டிவி' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...