தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் வரும் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கன மழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில், வரும் 26ம் தேதி முதல், வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை 26ல் துவங்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...