தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து பெண் ஊழியர் தர்ணா..!

தற்போது பணி செய்துவரும் தாராபுரம் போக்குவரத்து பணிமனையில் வேலையை தொடர்ந்து செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து பெண் ஊழியர் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் ஸ்டோர் மேனேஜ்மென்ட்-ல் வேலை செய்து வருபவர் ரேவதி(26). கணவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் உடுமலை சாலையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ரேவதி தனது வேலை பணி மாறுதல் தொடர்பாக தாராபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் திமுகவைச் சேர்ந்த நல்ல சேனாபதியை சந்தித்துள்ளார். தற்போது பணி செய்துவரும் தாராபுரம் போக்குவரத்து பணிமனையில் வேலையை தொடர்ந்து செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு தொமுச தொழிற்சங்க நிர்வாகியான நல்ல சேனாபதி ரேவதியை பார்த்து நீ அதிமுக ஆதரவில் 2014ம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டவர் ஆனால் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. நீ அதிமுக ஆதரவாளராக இருப்பதால் தாராபுரம் டிப்போவில் வேலை செய்வதற்கு உனக்கு இடம் கிடையாது என ஒருமையில் திட்டியுள்ளார்.

அதற்கு தனது 6 வயது குழந்தை உள்ளதால் குழந்தையின் படிப்பு பாதித்துவிடும். ஆதலால் தனக்கு தாராபுரம் டிப்போவில் தொடர்ந்து பணியாற்ற உதவிடுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதை பொருட்படுத்தாத தொழிற்சங்க திமுக நிர்வாகி நல்ல சேனாபதி இவரை தகாத வார்த்தையில் திட்டி அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி பேருந்து பணிமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் போலீசார் அவரை அழைத்துப் பேசினர். பின்னர், அவர் அரசு மருத்துவமனையில் அடிபட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்கும்வரை உறுதியாக நின்று தனது கணவருடன் சேர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...