திவான்சாபுதூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கலைவாணி சிலம்பரசன் பதவியேற்பு.!!

திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவியேற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 25-ஆண்டு பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்ததால், மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிட்டு 2297-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து அவர் இன்று திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவி ஏற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இருபத்தி ஐந்து ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்தது.

மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தி தேவி தர்மராஜ், மாணிக்கவேல், ராஜகாளியம்மன் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...