தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனாலோகு கோவை மாநகராட்சி கமிஷனரிடம் புகார்.!!

ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு சாலையில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் பணிபுரியக்கூடிய டாக்டர் அவருடைய தனியார் கிளினிக்கில் முழு கவனம் செலுத்துவதால், பேறுகாலத்திற்கு வரக்கூடிய பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

உடனடியாக அவரை மாற்றி புதிய டாக்டரை நியமிக்க வேண்டும் என திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிராஸ்கட் சாலையில் 8-ம் நம்பர் காய்கறி மார்க்கெட் அருகில் கோவை மாநகராட்சி சிடிஎம் ஹோம் மகப்பேறு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது இம்மருத்துவமனையில் பெண் டாக்டர் பெண் செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப் பட்டு வந்த நிலையில், இந்த மருத்துவமனைக்குத் தற்காலிக பணி மாறுதலில் ஜீவானந்தம் என்ற ஆண் டாக்டர் இங்கு பணியில் சேர்ந்த பின்பு தனியார் மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சரியாகத் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்காத காரணத்தால் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

இப்போது ஒரு சில பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை உள்ளது. ஆகவே இந்த ஆண் மருத்துவரை மாற்றிவிட்டு மருத்துவமனைக்குத் திறமையான பெண் மருத்துவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...