குழந்தையிடம் செயின் பறித்த திருடனை தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு.!!

குழந்தையிடம் செயின் பறித்து தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் திருடனை தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: குழந்தையிடம் செயின் பறித்த திருடனைத் தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள வெற்றிவேல் நகரைச் சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் சித்ரா சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் குழந்தையின் கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் செல்ல முயன்றவரைப் பார்த்த ராம் பிரகாஷ் சத்தம் போட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த துரைசாமி 57, ஓட்டுநர் என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவரை காவல்துறை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பீளமேடு காவல்துறை செயின் பறித்த துரைசாமி தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...