கோவையில் இருவேறு பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் 9 பவுன் நகை கொள்ளை..!!

இதில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஆசிரியையிடம் 2 பவுன் மற்றும் ஏடிஎம் கார்டு உட்பட பொருட்களையும் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம் 2வது வீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் வெற்றிவேல் (55). இவரது மனைவி சந்தானம் (50). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு சந்தானம் கடையில் இருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர் சந்தானத்தின் கழுத்திலிருந்த ஏழு பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த சந்தானம் சத்தம் போட்டார். இருப்பினும் இருவரும் தப்பினர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல, கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரம் வந்து அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.

இந்த நிலையில், மர்மநபர்கள் கவுரி மனோகரியின் பர்ஸை திருடிச் சென்றனர். பர்சில் இரண்டு பவுன் செயின், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இருந்தன.

பின்னர், இது குறித்து கவுரிமனோகரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...