கோவையில் இருவேறு பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் 9 பவுன் நகை கொள்ளை..!!

இதில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஆசிரியையிடம் 2 பவுன் மற்றும் ஏடிஎம் கார்டு உட்பட பொருட்களையும் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம் 2வது வீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் வெற்றிவேல் (55). இவரது மனைவி சந்தானம் (50). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு சந்தானம் கடையில் இருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர் சந்தானத்தின் கழுத்திலிருந்த ஏழு பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த சந்தானம் சத்தம் போட்டார். இருப்பினும் இருவரும் தப்பினர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல, கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரம் வந்து அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.

இந்த நிலையில், மர்மநபர்கள் கவுரி மனோகரியின் பர்ஸை திருடிச் சென்றனர். பர்சில் இரண்டு பவுன் செயின், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இருந்தன.

பின்னர், இது குறித்து கவுரிமனோகரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...