கோவையில் வீட்டின் சுவர் மீது ஏறி முருங்கைக்காய் பறித்தவர் தவறி செப்டிக் டேங்கில் விழுந்து பலி.!!

வீட்டின் சுவர் மீது ஏறி முருங்கைக்காய் பறித்தவர் தவறி செப்டிக் டேங்கில் விழுந்து மூச்சுத்திணறி பரிதாப பலியான சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



கோவை: கோவை அருகே சூலூரில் வீட்டின் சுவர் மீது ஏறி முருங்கைக்காய் பறித்துக் கொண்டிருந்தவர் தவறி செப்டிக் டேங்கில் விழுந்து மூச்சுத்திணறி பரிதாப பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, சூலூர் காங்கேயம்பாளையம் பழைய போஸ்ட் ஆபீஸ் வீதி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் செந்தில்குமார்(52). இவர் கூலி தொழிலாளி.

இவர் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் அருகே செப்டிக் டேங்க் மேலே நின்று முருங்கைக் காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செப்டிக் டேங்க் உள்ளே செந்தில்குமார் தவறி விழுந்தார்.

அருகில் உள்ளவர்கள் அவரை மீட்க முயன்ற போது மீட்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே செந்தில்குமார் மூச்சுத்தணறி உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...