கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருவதால் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பூரில் உள்நாட்டு ஆடை வர்த்தகம், வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த பனியன் தொழிற்சாலைகளில் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு வருடந்தோறும் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் ராக்கியாபாளையம், குமார் நகர், ஆலங்காடு, கருவம்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பனியன் இயந்திரங்களை சுத்தம் செய்து, தொழிலாளர்கள் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தி ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து, ஆயுதபூஜை வழிபாட்டின் போது பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் உள்நாட்டு ஆடை வர்த்தகம், வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த பனியன் தொழிற்சாலைகளில் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு வருடந்தோறும் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை முற்றிலும் ஓய்ந்த நிலையில் பனியன் தொழிற்சாலைகள் சீராக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் ராக்கியாபாளையம், குமார் நகர், ஆலங்காடு, கருவம்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு பனியன் இயந்திரங்களை சுத்தம் செய்து, தொழிலாளர்கள் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தி ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து, ஆயுதபூஜை வழிபாட்டின் போது பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.