திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியீடு

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இதில் நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த 100 புத்தகங்கள் வெளியிட உள்ளது. 

இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

திராவிட இயகங்களின் முன்னோடி அமைப்பான நீதிகட்சி தனது கொள்கைகளை பிரகடனம் செய்து நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற உள்ளது. 

வருகின்ற 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் நீதிக் கட்சியின் வரலாறு மற்றும் அதன் சாதனைகள் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூறு புத்தகங்களை வைகோ வெளியிட உள்ளார், அதனை தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராசேந்திரன் பெற்றுக்கொள்ள உள்ளார்.

இவ்விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதியரசர் அரிபரந்தாமன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், தகலான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்ற உள்ளனர்.

தொடர்ச்சியாக கருத்தரங்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழகத்தை தனித்தன்மை கொண்ட மாநிலமாக காரணமான நீதி கட்சியின் கொள்கை பிரகடன நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கருப்புச் சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்'' என அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...