15-ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வாகனங்களை அழிக்க முடிவு: மறுபரிசீலனை செய்ய சிட்டிசன் வாய்ஸ் கடிதம்.!!

15-ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கான அனுமதியை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


கோவை: 15-ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கான அனுமதியை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மிக சமீபத்தில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் வாயிலாக 15-வருடங்களும் அதற்கு மேலும் உபயோகத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் திரும்பப்பெற அல்லது சாலையில் பயணிக்க அனுமதியை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் மத்திய அரசால் கொண்டு வரப்படலாம் என்கிற செய்தி வந்து கொண்டிருக்கிறது.

15-ஆண்டுகளுக்கு மேலும் வாகனங்கள் சாலையில் இயக்கப்படும் என்றால் அப்படிப்பட்ட வாகனங்களுக்கு மறு பதிவு 8-மடங்கு வரை அதிகரிக்கப்பட உள்ளது. மேற்படி செய்தி, வாகனம் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் நம்ப முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இன்று சாமானிய மக்கள் அனேகமாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. அவர்களுக்கு இது மிகப் பெரிய கவலையை/சுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு இதுபோன்ற சிந்தனையும் நடவடிக்கையும் தற்போதைய கோவிட்-19 கால கட்டத்தில் தேவையும் அவசியமும் இல்லை என்று கருதுகிறோம். மாறாக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டால் அது ஏகபோக முதலாளிகளையும், பெரும் வியாபார மையங்களுக்கு மட்டுமே பயன் தரும்.

அதே சமயத்தில் சாதாரண ஏழை-எளிய மக்கள் ஏற்கனவே கொரோனா போன்ற ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டும் பொருளாதார மந்தநிலை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு என்ன செய்வது என்று அறியா நிலை உள்ளது.

நம் நாட்டில் தற்போதுள்ள கலாச்சார வழக்கங்கள் அடிப்படையில், ஒருவர் மிதிவண்டியோ அல்லது இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனமோ வைத்திருக்கும் பட்சத்தில் 2-அல்லது 30-ஆண்டுகள் வரை கூட நல்ல முறையில் பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே மக்களின் நலனுக்காக இப்படிப்பட்ட சிந்தனையை மத்திய அரசு தற்போதைக்கு கைவிட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு வாகன உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு 15-ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களைத் தொடர்ந்து சாலையில் இயக்க குறைந்த செலவில் சரியான பராமரிப்பு செய்து கொடுப்பது என்பதும் உசிதமாக இருக்கும். மேற்கண்ட எங்கள் கருத்தை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...