தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை: தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஹில்குரோ ரயில் நிலையம் அருகில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து ரயில் பாதையை மூடி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 07.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து 180-பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
கல்லாறு ரயில் நிலையத்தைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில் பாதை முழுவதுமாக மூடி இருந்ததைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்தது. பின்னர், அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே 180- பயணிகளுடன் திரும்ப வந்து கொண்டுள்ளது.
ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேலும்,மண் சரிந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி முடிவடையும் வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஹில்குரோ ரயில் நிலையம் அருகில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து ரயில் பாதையை மூடி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 07.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து 180-பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.
கல்லாறு ரயில் நிலையத்தைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில் பாதை முழுவதுமாக மூடி இருந்ததைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்தது. பின்னர், அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே 180- பயணிகளுடன் திரும்ப வந்து கொண்டுள்ளது.
ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேலும்,மண் சரிந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி முடிவடையும் வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.