தொடர் மழை காரணமாக உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு.!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!!

தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


கோவை: தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹில்குரோ ரயில் நிலையம் அருகில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்து ரயில் பாதையை மூடி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 07.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து 180-பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.

கல்லாறு ரயில் நிலையத்தைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்த பொழுது ரயில் முன் பெட்டியில் அமர்ந்திருந்த பிரேக் மேன் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு ரயில் பாதை முழுவதுமாக மூடி இருந்ததைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்தது. பின்னர், அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே 180- பயணிகளுடன் திரும்ப வந்து கொண்டுள்ளது.

ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து உதகை செல்லலாம் என்று மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும்,மண் சரிந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி முடிவடையும் வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...