பூட்டிய வீடுகள் குறித்து தகவல் தெரிவிக்காத சரவணம்பட்டி, பீளமேடு போலீசாருக்கு நோட்டீஸ்...! ஆணையர் தீபக் தாமோர் நடவடிக்கை

சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போக, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.

கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர, கோவை மாநகருக்கு உட்பட்ட 15 காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரோந்து பகுதிகளில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி இருக்கும் வீடுகளைப் பார்த்தால், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சமீபத்தில், கோவையில் நடைபெற்ற 4-க்கும் மேற்பட்ட பெரிய கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...