சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போக, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.
கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர, கோவை மாநகருக்கு உட்பட்ட 15 காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரோந்து பகுதிகளில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி இருக்கும் வீடுகளைப் பார்த்தால், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சமீபத்தில், கோவையில் நடைபெற்ற 4-க்கும் மேற்பட்ட பெரிய கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குறிப்பாக, வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போக, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.
கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர, கோவை மாநகருக்கு உட்பட்ட 15 காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரோந்து பகுதிகளில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி இருக்கும் வீடுகளைப் பார்த்தால், வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், சரவணம்பட்டி மற்றும் பீளமேடு பகுதியில் பகல் நேரங்களில் ரோந்து சென்றும், பூட்டிய வீடுகளை குறித்து தகவல் தெரிவிக்காத, 4 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சமீபத்தில், கோவையில் நடைபெற்ற 4-க்கும் மேற்பட்ட பெரிய கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.