கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!

இருவேறு பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருவேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஸ்ரீராம் அவென்யூ பகுதியை சேர்ந்த தாமோதரசாமி என்பவரின் மகன் தனஞ்சை (38). இவர் திருச்சியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு இங்கு பூட்டிய நிலையில் இருந்துவந்தது.

இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் வேலைக்காரப் பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கதவு உடைந்து இருப்பதாக கூறினார்.

இதையடுத்து, தனஞ்சை கோவைக்கு வந்து வீட்டை பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம் மட்டும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனஞ்சை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல, சரவணம்பட்டி அடுத்த அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் முத்து சரவணன் (39). கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் முத்து சரவணன் சென்றர்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்கள், மோதிரம் என ஐந்தரை பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து முத்துசரவணன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...