கோவையில் 9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது.!!

கோவை துடியலூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை துடியலூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் அருகே உள்ள பெரிய மத்தம் பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 9-வயதில் ஒரு மகள் உள்ளார்.

இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சிறுமி வீட்டிலிருந்தபடி பாடம் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது சிறுமியின் தாய் தனது மகளை அந்த பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார்.

சிறுமி தனது பாட்டி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி வயது 60, கூலித்தொழிலாளி.

கையை பிடித்து இழுத்து மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார்.

உடனடியாக ரங்கசாமி சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தனது பெற்றோர் வேலை முடிந்து திரும்பியதும் நடந்த சம்பவங்களைச் சிறுமி அவர்களிடம் அழுதபடியே கூறினார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி ரங்கசாமியைக் கைது செய்தனர்.

அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரங்கசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...