கோவையில் 9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது.!!

கோவை துடியலூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை துடியலூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் அருகே உள்ள பெரிய மத்தம் பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 9-வயதில் ஒரு மகள் உள்ளார்.

இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சிறுமி வீட்டிலிருந்தபடி பாடம் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது சிறுமியின் தாய் தனது மகளை அந்த பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார்.

சிறுமி தனது பாட்டி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி வயது 60, கூலித்தொழிலாளி.

கையை பிடித்து இழுத்து மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார்.

உடனடியாக ரங்கசாமி சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தனது பெற்றோர் வேலை முடிந்து திரும்பியதும் நடந்த சம்பவங்களைச் சிறுமி அவர்களிடம் அழுதபடியே கூறினார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி ரங்கசாமியைக் கைது செய்தனர்.

அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரங்கசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...