கோவையில் விமான நிலையத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிப்பாராய் (31). இவர் கோவையில் உள்ள கான்கிரீட் கலவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று அசாம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரின் பையை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அதில் மான்கொம்பு இருந்தது.
பின்னர், அவரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதனை அடுத்து, சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை காட்டுப்பகுதியில் மான் கொம்புகளை பெற்று அசாம் செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிப்பாராய் (31). இவர் கோவையில் உள்ள கான்கிரீட் கலவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று அசாம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரின் பையை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அதில் மான்கொம்பு இருந்தது.
பின்னர், அவரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதனை அடுத்து, சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை காட்டுப்பகுதியில் மான் கொம்புகளை பெற்று அசாம் செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.