கோவையில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகளுக்குக் கொரோனா உதவித்தொகை வழங்கிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: தங்கள் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திச்செய்துக்கொள்ளும் விதமாக பலர் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமும், தரைக்கடைகள் மூலமும் காய்- கனிகள், பானிபூரி, விளையாட்டுப் பொம்மைகள், பூ வியாபாரம், துணி வியாபாரம் என பல தரப்பட்ட வியாபாரங்களை ஆயிரக்கணகான வியாபாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆனால் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், கோவை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் அடையாள அட்டை இல்ல்லை என்றாலும் கொரோனா உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கவேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் கூறியது போல 15,௦௦௦ ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கிடவும் வியாபாரிகள் வலியுறுத்திவருகின்றனர். மேலும் பிரதமர் மந்தியின் ஆத்மநிர்வார் நிதியின மூலம்1,௦௦௦ ரூபாயை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிபந்தனை இன்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர்.

முன்னதாக சாலையோர வியாபாரிகள் கைகளில் சிஐடியூ கொடிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவவலக வளாகத்திற்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை கோசங்களாக முழங்கினர்.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமும், தரைக்கடைகள் மூலமும் காய்- கனிகள், பானிபூரி, விளையாட்டுப் பொம்மைகள், பூ வியாபாரம், துணி வியாபாரம் என பல தரப்பட்ட வியாபாரங்களை ஆயிரக்கணகான வியாபாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
ஆனால் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், கோவை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் அடையாள அட்டை இல்ல்லை என்றாலும் கொரோனா உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கவேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் கூறியது போல 15,௦௦௦ ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கிடவும் வியாபாரிகள் வலியுறுத்திவருகின்றனர். மேலும் பிரதமர் மந்தியின் ஆத்மநிர்வார் நிதியின மூலம்1,௦௦௦ ரூபாயை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிபந்தனை இன்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர்.
முன்னதாக சாலையோர வியாபாரிகள் கைகளில் சிஐடியூ கொடிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவவலக வளாகத்திற்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை கோசங்களாக முழங்கினர்.