கோவையில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்கவேண்டும்- ஆட்சியர் மனு அளித்த வியாபாரிகள்!

கோவையில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகளுக்குக் கொரோனா உதவித்தொகை வழங்கிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தங்கள் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திச்செய்துக்கொள்ளும் விதமாக பலர் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமும், தரைக்கடைகள் மூலமும் காய்- கனிகள், பானிபூரி, விளையாட்டுப் பொம்மைகள், பூ வியாபாரம், துணி வியாபாரம் என பல தரப்பட்ட வியாபாரங்களை ஆயிரக்கணகான வியாபாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.



ஆனால் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், கோவை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் அடையாள அட்டை இல்ல்லை என்றாலும் கொரோனா உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கவேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் கூறியது போல 15,௦௦௦ ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கிடவும் வியாபாரிகள் வலியுறுத்திவருகின்றனர். மேலும் பிரதமர் மந்தியின் ஆத்மநிர்வார் நிதியின மூலம்1,௦௦௦ ரூபாயை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிபந்தனை இன்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் வழங்கினர்.



முன்னதாக சாலையோர வியாபாரிகள் கைகளில் சிஐடியூ கொடிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவவலக வளாகத்திற்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை கோசங்களாக முழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...